ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக: மீதமுள்ள தடுப்பூசிகள் நாளை…

-கிரிசாந் மகாதேவன்-

30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் அவர்களின் தலைமையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற 5,000 சினோபாம் தடுப்பூசிகளை மூன்று நாட்களுக்கு மக்களுக்கு செலுத்தும் விதமாக திட்டமிடப்பட்டு இருந்தது.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்கள் தடுப்பூசி ஏற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் செயற்பாடுகளுக்காண பங்களிப்பினை ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மேலும் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு உணவு போன்ற இதர உதவியினை பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் உள்ளிட்ட பிரதேச சபையினரும் இரண்டு நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மூன்றாம் நாளாகிய நாளையத்தினம் மீதமுள்ள தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்திலும் , ஏனைய 30 – 60 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker