இலங்கை

துமிந்த சில்வா கைதானார்!

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார். உடல் நலமின்மையை காரணம் காட்டி  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிபெற்ற அவரை, அங்கு சென்ற  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரைக் கைது செய்து சிறைச்சாலை காவலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் நேற்று (31.05.22) உத்தரவு பிறப்பித்தது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு, உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் 18 ஆம் இலக்க விடுதியில் துமிந்த சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக  இன்று (01.06.22) மதியம் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதற்கமைய வைத்தியசாலைக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைதுசெய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker