ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய பாரிய கையெழுத்து வேட்டை இலக்கை எட்டிய நிலையில் நிறைவு : அடுத்த கட்ட முன்னெடுப்புக்கள் ஆரம்பம்…

அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேசம் அண்ணளவாக 26,941 மக்கள் தொகையை கொண்டு காணப்படுகின்ற போதிலும் ஆலையடிவேம்பு பிரதேச பகுதியில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் ஒன்று இல்லாமல் மக்கள் தொலைதூரங்களுக்கு சென்று குறித்த சேவையைப் பெற்றுக்கொள்ளும் அவல நிலையில் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்ந்து வருகின்ற நிலையில்.

பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்படுகின்ற குறித்த வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது ஒன்றையாவது நிலைநிறுத்த வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தும் வகையில் மேற்படி கோரிக்கை அடங்கிய ஆவணத்திற்கு 5000 பேரின் கையெழுத்து வேண்டி கையெழுத்து வேட்டை தன்னார்வம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பன்னிரெண்டாம் நாளாகிய இன்றைய தின முடிவில் நிர்ணய இலக்கு எட்டப்பட்டு இன்றைய தினம் நிறைவுக்கு வந்தது.

இவ் தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் வேண்டிய கையெழுத்து வேட்டை கட்டம் கட்டமாக கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் தன்னார்வம் கொண்டவர்களின் ஒத்துழைப்புடன் ஆரவாரம் இல்லாமல் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கையெழுத்து வேட்டை நிறைவுக்கு வந்த நிலையில் அடுத்தகட்ட முன்னெடுப்புகளுக்கு பன்முக முனைப்புடன் ஆயத்தமாகி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker