திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச இந்து ஆலயங்களுக்கான புனரமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு …

-காந்தன்-
அரசாங்கத்தின் கொள்கைச் சட்டகமான “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின் கீழ் பிரதமரும் புத்தசாசன மத விவகார மற்றும் “கலாசார அமைச்சருமாகிய கெளரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்து சமய கலாசாரஅலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்து ஆலயங்களின் புனரமைப்புக்கென திணைக்களத்தினால் நிதி உதவி வழங்கப்படும் ஆலயங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு.
அம்பாரை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட ஆலயங்களின் அபிவிருத்திக்கான கொடுப்பனவு காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (23) திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேசசெயலாளர் திரு ரி.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு வே,ஜெகதீசன் கலந்துகொண்டதுடன். இந்நிகழ்வில் திருக்கோவில் உதவிபிரதேச செயலாளர் திரு.கே.சதிசேகரம் மாவட்டசெயலக இந்துக்கலாசார உத்தியோகத்தர்கள் கு.ஜெயராஜி,ந.பிரதாப் பிரதேச உத்தியோகத்தர்கள் திருமதி. ரி.நிஷாந்தினி திருமதி.பி.சர்மிளா மற்றும் ஆலய தர்மகர்த்தாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.