ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் ”e-கல்வி திறன் வகுப்பறை” திறப்பு விழா…

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் e-கல்வி திறன் வகுப்பறை திறப்பு விழா இன்றைய தினம் (05) காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.த.இராசநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி.ந.புள்ளநாயகம் (மாகாணக்கல்விப் பணிப்பாளர் – கிழக்கு மாகாணம்) , விசேட அதிதியாக திரு.யோ.ஜெயச்சந்திரன் (வலயக்கல்விப் பணிப்பாளர்- திருக்கோவில்) அவர்களும் மேலும் சிறப்பு அதிதிகள் , கௌரவ அதிதி , பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் கல்வி திறன் வகுப்பறை செயத்திட்டத்திற்கு “Oru Pannai Education” அவர்கள் கொடையாளர்களாக காணப்படுவதுடன் குறித்த நிகழ்வானது சுகாதார முறைகளுடன் கலை நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker