ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் சிறு போக விவசாயக் கடன் வழங்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் சிறு போக விவசாயக் கடன் வழங்கும் நிகழ்வு சங்கத்தலைவி திருமதி.பி.மங்கையர்க்கரசி தலைமையில் மகாசக்தி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு தலைமைக்காரியாலய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கல்முனை ஜனாப் M.I.M. பரீட் அவர்கள் பிரதம அதிதியாகவும், சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கல்முனை – ஜனாப். M.C. ஜலால் டீன் அவர்கள் விசேட அதிதியாகவும், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கல்முனை – திரு.கே. காந்தரூபன் அவர்கள் விசேட அதிதியாகவும், சங்கச் செயலாளர். திரு.ச.திலகராஜன் அவர்களும், பொருளாளர் – திருமதி.சு வினோதா அவர்களும், சங்க இயக்குனர் சபை உறுப்பினர்களான, திருமதி வி. பிரகலாதேவி அவர்களும், திரு.க. நவரத்தினம் அவர்களும் கெளரவ அதிதியாக கலந்து கொண்டனர்.