ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு கோட்ட மட்ட தமிழ் மொழித்தின இறுதி நிகழ்வுகள் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில்…

ஆலையடிவேம்பு கோட்டத்தின் தமிழ் மொழித்தின இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் (24) காலை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

அதிதிகள் முன் வாசலில் இருந்து மலர்மாலை அணிவித்து கலாசார நிகழ்வுகளுடன் வரவேற்கப்பட்டு
முதலாம் கட்ட நிகழ்வானது ஆலையடிவேம்பு கோட்டத்தின் 16 பாடசாலை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்புடன் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும் இன் நிகழ்வில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், ஆலையடிவேம்பு கோட்ட பாடசாலைகளின் அதிபர்களும், திருக்கோவில் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்களும், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் நிகழ்வின் போது ஆலையடிவேம்பு கோட்ட மட்ட தமிழ் மொழித்தின முதலாம் கட்ட எழுத்தாக்க போட்டிகளியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அதிபர்களால் மாணவர்களுக்கு வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker