ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் ஆறாம் நாள் நிர்த்தாஞ்சலித் திருவிழா (படங்களும் இணைப்பு)

-சஜித்தனன்-
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா ஆலயத்தலைவர் இ.ஜெகநாதன் தலைமையில் செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள் புதன்கிழமை (04.09.2019) திருக்கொடியேற்றப் பெருவிழா அன்னதான நிகழ்வு இரவுநேர திருவிழா என முதலாம் நாளுக்கான நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.
நேற்றய (09.09.2019) ஆறாம் நாளுக்கான காலை நிகழ்வு திருவிழா காலை 08.00 மணியளவில் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்வு திரு .ச.சதாசிவம் குடும்பத்தினரினால் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் இரவுநேர ஆறாம் நாள் நிர்த்தாஞ்சலித் திருவிழா திரு.ச.சதாசிவம் குடும்பம் (France) அவர்களினால் ஆலயத் தலைவர் இ.ஜெகநாதன் தலைமையில் கிரியைகள் சிவ ஸ்ரீ புண்யகிருஷ்ண குமார குருக்கள் அவர்களினாலும் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.