ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் 04ம் நாள் திருவிழா…

-தஸ்திகாந், காபிஷன்-
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சுபகிருது வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (30.08.2022) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி (31.08.2022) காலை திருக்கொடியேற்றப் பெருவிழா இடம்பெற்றது
இதனை தொடர்ந்து இன்று (03.09.2022) திரு சி.வேலாயுதம் போடியார் குடும்பத்தினரால் நான்காம் நாளுக்கான திருப்புகழ் பராயணத் திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வும் சிறப்பாக நடாத்தப்பட்டு இனிதே நிறைவடைந்தது.