ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை !

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியாவில்,அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்களையும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களையும் பார்வையிட சென்றிருந்த போதே, இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்டாலின்;
அனர்த்தத்தால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோன்று சாதாரண மக்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதனால் அரசாங்க ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.விசேடமாக நுவரெலியாவில் உள்ள ஆசிரியர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,வீடுகளின்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



