இலங்கை

கிண்ணியா விபுலானந்த வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் (56) பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன பாடசாலையின் அதிபர் திரு.செ.சத்தியசீலன் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிகவும் அதிகஷ்ட, தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையின் (56) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்விற்கு பாடசாலையின் ஆசிரியைகளான திருமதி. க.சத்தியசீலன், திருமதி. அ.பிரதீபா மேலும் அபிவிருத்தி சங்க செயலாளர் அ.சங்கீத்தன், பெற்றோர்கள் மாணவர்கள் என வருகை தந்திருந்தனர்.

இணைந்த கரங்கள் அமைப்பு கல்விற்க்கான சேவையினை ஆரம்பித்து ஒரு வருடமானாலும் நூற்றிற்கு மேற்பட்ட பாடசாலையை கடந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி அவர்களின் கல்விச் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான சி.காந்தன்,மா. ஜெயநாதன், சிருஸ்காந் சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker