இலங்கை

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று

ஜே.கே.யதுர்ஷன்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

இவ் கூட்டத்தில் முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் உரப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் பருவத்திற்கு கால விவசாய தேவையான உரங்களை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தேவையான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

உர நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயற்பட அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் உரங்களை உடனுக்குடன் விநியோகிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும், வரும் பருவ காலத்தில் விவசாய பணிகளை தொடங்குவதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கு தேவையான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், அம்பாறை பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அத்துடன் சுகாதாரம், கல்வி, கடற்றொழில், போக்குவரத்து, வீதி நிர்மாணம் என பல்வேறு துறைகளில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு, அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker