இலங்கை

அம்பாறையில் துப்பாக்கி மற்றும் கத்திகள் கண்டெடுப்பு: ஒருவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற பொலிஸாரின் சோதனை நடவடிக்கைளின்போது, துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லிரைச்சல் கிழக்கு சலாம் பள்ளி பகுதியில், கைவிடப்பட்ட காணி ஒன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய அப்பகுதியில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டபோது,  உரைப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கத்தி என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறீன் பீல்ட் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்திகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரை கல்முனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker