Uncategorised
அம்பாரை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா….

அம்பாரை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய இவ் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழாவான ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழாவானது கடந்த 30.08.2024 அன்று கோலாகலமாக இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியம், இந்து மாமன்றம் மற்றும் இந்து இளைஞர் மன்றம் ஆகியோரின் பங்களிப்புடன் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது.