ஆலையடிவேம்பு

இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் -ஆலையடிவேம்பில் மாத்திரம் 6987 குடும்பங்களுக்கு 03 கோடியே 49 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

வி.சுகிர்தகுமார்

  அம்பாரை மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்பட்டுவருவதாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எச்.எம்.சப்றாஸ் தெரிவித்தார்.

இதனூடாக மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி முத்திரை பெறுவோர் மற்றும் சமுர்த்தி முத்திரைக்கு தகுதியானோர், தொழில் பாதிப்பு, மேன்முறையீடு பட்டியலில் மூலம் தெரிவு செய்யப்பட்ட 173368 குடும்பங்களுக்கு 86 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளினாலும் இக்கொடுப்பனவுகள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி வங்கியில் இருந்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மொத்தமாக பெறப்பட்ட நிதி பிரிவு ரீதியாக மக்கள் காலடிக்கு கொண்டு வழங்கும் நடவடிக்கை பிரதேச செயலாளர் கே.லவநாதன் மற்றும் தலைமையக  சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் வங்கி முகாமையாளர்களான எம்.கண்ணதாசன் மற்றும் கே.அசோக்குமார் ஆகியோரின் கண்காணிப்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

ஆலையடிவேம்பில் மாத்திரம் 6987 குடும்பங்களுக்கு 03 கோடியே 49 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இதேநேரம் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் கொடுப்பனவுகள் யாவும் இம்மாதம்கரா 29ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் இதற்கான சகல ஏற்பாடுகளும் சிறந்த முறையில் சமுர்த்தி வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைவாக மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகள் யாவும்  கொடுப்பனவுகளை வழங்கும் கால அட்டவணையை தயாரித்து மாவட்ட சமுர்த்தி காரியாலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளன.

இதனடிப்படையில் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளுக்கு குறிப்பிட்ட தினங்களில் பணத்தை வழங்குவதற்கான சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வியடம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெறவிரும்புவோர் மாவட்ட செயலக சமுர்த்தி கண்காணிப்பு உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.ஹனிபாவின் 0777004761 இலக்கமுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

சமுர்த்தி மூலமான 5000ரூபா முதலாம் கட்ட கொடுப்பனவானது அம்பாரை மாவட்டத்தில் சிறப்பான முறையில் குறித்த காலப்பகுதியில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker