இலங்கை
சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் பலர் கைது


கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் ஆயிரத்த 740 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியைப் பேணாமை உள்ளிட்ட ஒழுங்கு விதிகளை மீறியமை தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



