இலங்கை
அதிகரிக்கப்படுகின்றது அனைத்து வகையான மதுபானங்களின் விலை!

அனைத்து வகையான மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களுக்கு இன்று(செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் 20 வீதம் வரி அறவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.