ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள களப்பு பகுதி மண்ணைக்கொண்டு நிரப்பும் செயற்பாடு: அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் கவலை – அதிகாரிகள் தடுப்பதற்கான நடவடிக்கையில்….

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள களப்பு பகுதி மண்ணைக்கொண்டு நிரப்பும் செயற்பாடு இடம்பெற்று வந்த நிலையில் அருகில் உள்ள குடியிருப்புக்கள் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என பிரதேச மக்கள் கவலை தெரிவித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

எங்கள் பகுதியில் காலம் காலமாக வெள்ள காலத்தில் நீர் வடிந்தோடும் குறித்த களப்பின் பெரும்பகுதி நிரப்பப்படுவதால் அருகில் உள்ள குடியிருப்புக்கள் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என தெரிவித்து இருந்த நிலையில்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் அவர்கள் உடனடியாக கவனம் செலுத்தியதுடன் குறித்த செயற்பாட்டினை தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker