ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணியில் இணைந்து கொள்ள அழைப்பு….

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணி ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.02.2024) காலை 6.00 மணிமுதல் இடம் பெறவுள்ளது.

இந்த சிரமதான பணியில் தன்னார்வமாக அனைவரும் கலந்து கொண்டு தங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குமாறு ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.

ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் குறித்த மயானமானது நீண்டகாலமாக துப்பரவுப் பணிகளும் இடம்பெறாத நிலையில் மரம், செடி, முட்புதர்கள், பற்றைக் காடுகள், கற்கள் என்பனவற்றோடு குப்பைகளும் நிறைந்து காணப்படுவதனால் தற்போதைய சூழலில் குறித்த சிரமதான பணி மேற்கொள்வது மிக முக்கியமானதாகவும் காணப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker