ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானத்துக்கான அழைப்பு…

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் (02.10.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில் வைத்தியசாலையையும், வைத்தியசாலையின் சுற்றுப்புற சூழலையும் சுத்தம் செய்யும் சிரமதானம் ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த சிரமதானத்தினை அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினர், சமூக அமைப்புக்கள் என்பவற்றுடன் இணைந்து வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழு ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள சமூக நலன் விரும்பிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் பிரதேச இளைஞர்கள் என அனைவரும் தவறாது கலந்து கொண்டு வைத்தியசாலையின் மாபெரும் சிரமதான பணியில் கலந்து கொள்ளுமாறு வைத்தியசாலை புதிய அபிவிருத்தி குழுவினர் அழைக்கின்றார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker