ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று, திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு…

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் M.தங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16) நடைபெற்றது.

நிகழ்வில் திருக்கோவில் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் S.சுரநுதன் பிரதம அதிதியாகவும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர் S.அகிலன் விசேட அதிதியாகவும், அக்கரைப்பற்று- ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலய அதிபர் திருமதி.R.நித்தியானந்தன், SDC – செயலாளர் .R.முரளிதர்ஷன் மற்றும் அக்கரைப்பற்று, மக்கள் வங்கி S.ராஜகாந்தன் சிறப்பதிதிகளாகவும் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்து பரிசுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.

திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு வைத்தியர் S.அகிலன் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெறுமதி மிக்க நிகழ்வு மேடையும் அனைவர் முன்னிலையிலும் திறந்து வைக்கப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker