ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று சிறுவர் பூங்காவின் தற்போதைய நிலையும்: மக்களின் கோரிக்கையும்!

M.கிரிசாந்

ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று 7ம் பிரிவு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஆனது பலரது அயராத முயச்சியால் உருவாக்கப்பட்டு சறுக்கு விளையாட்டு உபகரணம், ஊஞ்சல், பிள்ளைகளுக்கான சீசா என பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஓய்வுக்கான இருக்கைகள் அமைந்தவாறு மிகவும் நேர்த்தியான அழகான முறையில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொருத்தமான இடத்தியில் பிரதேச சிறுவர்களின் நலன்கருதி அமைக்கப்பட்டு இருக்கின்றபோதிலும்.

இவ் சிறுவர் பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள், சிறுவர்கள் பாவனைக்கு செல்ல முடியாத மற்றும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதன் காரணமாக தூர இடங்களுக்கு பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களை அழைத்துச்செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கலை, பண்பாடு, கலாச்சாரம், விளையாட்டு என்பன முக்கியமானதாக காணப்படுகின்றது. சிறுவர்களுக்கு விளையாட்டு என்பது இன்றியமையாதது உளவியல் ரீதியான திருத்திப்படுத்தல் என்பது மிக முக்கியமானது. சிறுவர்களுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி மிகச்சிறந்தது என்பதுடன் முக்கியமானது என பல ஆய்வுகளின் முடிவுகளும் காணப்படுகின்றது.

இவ் விடயமானது சிறுவர்களின் கல்வியில் அதாவது விளையாட்டுடன் கூடிய கல்வியில் பாதிப்பு செலுத்தும் விடயமாக காணப்படுகின்றது.

சிறுவர் பூங்காவினை பராமரிக்க வேண்டிய கடப்பாடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உரிய பிரதிநிதிகளுக்கு காணப்படுகின்ற போதிலும் அவர்களின் அசமந்த போக்கினால் குறித்த சிறுவர் பூங்காவினை பயன்படுத்த முடியாததாக காணப்படுகின்றது.

அதிகாரிகள், பிரதிநிதிகள் இவற்றினை நிவர்த்தி செய்வது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker