ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் கௌரவிப்பு…..

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 19 ஆம் திகதி பாடசாலையின் அதிபர் திரு.க.தங்கவடிவேல் அவர்கள் தலைமையில் கோலாகலமாக பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.இரா.உதயகுமார் (வலயக்கல்வி பணிப்பாளர், திருக்கோவில்) , சிறப்பு விருந்தினராக திருமதி.மா.மயுரன் (கோட்டக்கல்வி பணிப்பாளர், ஆலையடிவேம்பு), திரு.மா.யோகராஜன் (பாடசாலை மேன்பாட்டு இணைப்பாளர்,திருக்கோவில்) மற்றும் கௌரவ விருந்தினராக திரு.ஆனந்தரூபன் (அதிபர்-தம்பட்டை மகா வித்தியாலயம்) அவர்களும் நிகழ்வை கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

குறித்த நிகழ்வு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்திருந்ததுடன் மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள் மேலும் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker