ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ணா மிஷன் மகாவித்தியாலயத்தில் 1985 A/L மாணவர்களின் அனுசரனையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு….

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ணா மிஷன் மகாவித்தியாலயத்தில் 1985 A/L கல்வி கற்ற கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களின் அனுசரனையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட இவ் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களை இறுதிப் பரீட்சைக்கு தயார்படுத்தும் விதமாக இலவச வழிகாட்டல் செயலமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (22) நடாத்தப்படவுள்ளது.

செயலமர்வின் வளவாளராக கடந்த ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகம் சாதனைகள் புரிந்த பிரபல ஆசிரியர் ம.ஜெயக்குமார் (MED,BA,PGDE,PGDSNE, NDT) கலந்துகொள்ளவுள்ளார்.

இவ் செயலமர்வு முன்னோடிப் பரீட்சையை நடாத்தி, வினாத்தாளை மதிப்பீடு செய்த பின், விசேட வழிகாட்டல் செயலமர்வை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, பங்குபற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எழுது கருவி பரிசாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த செயலமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (22) காலை 8.00 மணிக்கு அக்கரைப்பற்று, இராமகிருஸ்ணா கல்லூரியிலும், பி.ப 2.00 மணிக்கு கோளாவில் விநாயகர் வித்தியாலயத்திலும் இரண்டு பிரிவுகளாக மொத்த பாடசாலைகளையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த செயலமர்வில் சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களும் கலந்து பயன்பெற அழைப்பு விடுக்கிறார்கள் அக்கரைப்பற்று, இராமகிருஸ்ணா மிஷன் மகாவித்தியாலயத்தில் 1985 A/L கல்வி கற்ற கணித விஞ்ஞான பிரிவு மாணவர்கள்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker