இலங்கை

பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் மரண அச்சுறுத்தல் விவகாரம்- இன்று மீண்டும் நீதிமன்றில்

பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி இலங்கை தூதரகத்தின்  பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோமரண அச்சுறுத்தல் சைகை செய்தது  தொடர்பான வழக்கினை வெஸ்மிஸ்டர்ஸ் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

இனப்படுகொலையை தடுப்பது வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

2018 பெப்ரவரி நான்காம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்ற விசாரணை மீண்டும் இடம்பெறுகின்றது.

 

இலங்கை தூதரகத்திற்கு வெளியே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ  மரண எச்சரிக்கை விடுப்பதை  காண்பிக்கும் வீடியோக்களும் படங்களும் வெளியானதை தொடர்ந்து  சர்வதேச அளவில் பலத்த சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இனப்படுகொலையை தடுப்பது வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான அமைப்பு இதற்கு உதவியளித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker