இலங்கைபிரதான செய்திகள்
Trending

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு (UNGA) முன்னதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு நேற்று (23) பிற்பகல் அமெரிக்காவில் உள்ள ஐ.நா. செயலகத்தின் மனித உரிமைகள் பேரவை அறையில் நடந்தது.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி, மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

நேற்று (23) அமெரிக்காவை சென்றடைந்த ஜனாதிபதி, இன்று (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3:15 மணிக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் உரையாற்ற உள்ளார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker