இலங்கை

நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இடர் முகாமைத்துவ குழு

சீரற்ற காலநிலை காரணமாக நியூ டயமன்ட் கப்பலில் பரவிய தீயை இடர் முகாமைத்துவ குழுவினர் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை சங்கமன்கண்டியில் இருந்து 30 கடல்மைல் தொலைவில் வீசிய பலத்த காற்று காரணமாகவும் கப்பலின் உள்பகுதியில் காணப்படும் அதிக வெப்பம் காரணமாக நேற்றைய தினம் இவ்வாறு மீண்டும் தீ பரவியிருந்தது.

இந்த நிலையில், இரசாயன பொருட்களையும் நீரையும் பயன்படுத்தி வெப்பத்தை தணிப்பதற்கான முயற்சிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்பலனாக, இலங்கைக் கடற்படை, விமானப்படை, துறைமுக அதிகாரசபை மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோரப் பாதுகாப்புப்படை ஆகியன இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker