இலங்கை
இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உரிமங்களைப் பதிவு செய்யத் தீர்மானம்!

இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உரிமங்களைப் பதிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் N.C. விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்.
காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவுசெய்வதில் காணப்படும் மோசடிகளை இல்லாது செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலிக் காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிப்பு தொடர்பாக வருடமொன்றுக்கு சுமார் 3,000 முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக காணி பதிவுசெய்வதற்கான புதிய மென்பொருளை அடுத்த மாதம் தொடக்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.