இலங்கை

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தப்பிப்பதைப் பற்றி யாரும் யோசிக்க முடியாது என எச்சரிக்கை!!

புதிய இயல்புநிலை மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொதுமக்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கொரோனா, உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. எனவே இந்த சூழ்நிலையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் இந்த மோசமான அச்சுறுத்தலில் இருந்து தப்பிப்பதைப் பற்றி யாரும் யோசிக்க கூட முடியாது என எச்சரித்துள்ளார். இந்த நிலையில் உலகம் முழுவதும் வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

எனினும் இந்த வைரஸை ஒழிப்பதற்கான ஒரு காலத்தை உலக சுகாதார அமைப்பினால் கூட கணிக்க முடியவில்லை. கொரோனா தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அவை 2019இற்கு முன்னர் இருந்ததை போன்ற ஒரு வாழ்க்கையை வாழ உதவக்கூடும் அல்லது உதவாமலும் போகலாம் என்றும் வைத்திய கலாநிதி அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker