இலங்கை

நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை : கெஹெலிய!!

இலங்கையில் கோவிட் வைரஸ் நிலைமை மோசமாகிவிட்டால், நாடு முழுவதும் முடக்கப்படுவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் முடக்கப்படுவதற்கான அவசியம் குறித்து விவாதம் நேற்று கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்றது.

இந்தநிலையில் வைரஸ் பரவுவதைக் குறைக்க தற்போது வலய மற்றும் பகுதி வாரியாக முடக்குதல் போதுமானது என்பது அரசாங்கத்தின் கருத்தாக உள்ளது என்று ரம்புக்வெல்ல கூறினார். அந்த நேரத்தில் நாட்டின் நிலைமையைப் பொறுத்து எதிர்காலத்தில் இந்த முடிவு மாறக்கூடும் என்று அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அண்மையில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அண்டை நாடான இந்தியாவைப் போல இலங்கையும் மாறாது என்று அவர் குறிப்பிட்டார்.

“இலங்கை மக்கள் விவேகமானவர்கள், மேலும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அவர்கள் பொறுப்பான மற்றும் விவேகமான முறையில் செயல்படுவார்கள் என்று நம்புவதாக அமைச்சர் கூறினார்.

தனிமைப்படுத்தல் மற்றும் முடக்குதல் தொடர்பான முடிவுகள் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தால் எடுக்கப்பட்டதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker