இலங்கை

சமூர்த்தி பயனாளிகளின் சிக்கல்களுக்கு தீர்வினை பெற பொறிமுறை செயல்திட்டம்

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்களுக்கு எவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது என செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை(18) மாலை இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

எமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பங்களுக்கான பல்வேறு கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.இத்திட்டமானது 20 பிரதேச செயலகங்களை ஒருங்கியைத்து ஏறத்தாழ 43 சமூர்த்திவங்கிகளின் ஊடாகவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசாங்கம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் நேரடி வழிகாட்டலில் சமுர்த்திப் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பிரகாரம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

அடுத்து கொரோனா வைரஸ் அனர்த்த நிலைமை காரணமாக வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் இழந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினர்களுக்கு வழங்கக்ககூடிய 5000 ரூபா கொடுப்பனவுகளை நாங்கள் இனி வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

இதற்காக பல மில்லியன் ரூபாய்களை அம்பாறை மாவட்டத்திற்கான சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் எமக்கு வழங்கி உள்ளன.ஆகவே அம்பாறை மாவட்டத்தில் இந்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் காணப்படக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கு எமது திணைக்களமானது இந்த மானியங்களையும் கடன்களையும் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக குறிப்பிட்ட எங்களது கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கி அந்த பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று வழங்கவுள்ளொம் என கூறினார். மேலும் சமுர்த்தி வங்கியினூடாக இத்திட்டத்தை செயற்படுத்துகின்றதுடன் அரசின் விடுமுறை மற்றும் ஊரடங்கு என்பவற்றையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக குறைந்த ஆளணியுடன் பல சிரமங்களுக்கும்இஇன்னல்களுக்கும் மத்தியில் எமது உத்தியோகத்தர்கள் பணியாற்றி வருகின்றதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே பொதுமக்கள் விணாக முரண்படுவதில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் சமூர்த்தி பயனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் ஒரு பொறிமுறையை மாவட்ட சமுர்த்தி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் மாவட்ட சமூர்த்தி காரியலய உள்ளக கணக்காய்வு பிரிவு மற்றும் வங்கியின் முகாமைத்துவப் பிரிவு 24 மணித்தியாலமும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.அதனடிப்படையில் நாங்கள் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் குறிப்பிட்ட ஒவ்வொரு அதிகாரியை நியமித்துள்ளோம். இவ்வதிகாரிகளை தொடர்பு கொண்டு பிரச்சினைகளுக்குரிய உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker