இலங்கை
ஜனாதிபதி கோட்டாபயவின் உரை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய கொள்கைவிளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.
இன்று காலை 9.00 மணி முதல் இது குறித்த விவாதம் இடம்பெறும்.
புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று முற்பகல் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், எதிரணி உறுப்பினர்களுக்கு விவாதத்தில் உரையாற்றுவதற்கு 40 வீத நேர ஒதுக்கீடே வழங்கப்பட்டுள்ளது என்ற அதிருப்திக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.