உலகம்

கொரோனா தடுப்பூசி விநியோகம் ஜனவரியில் ஆரம்பம் – அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகம், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, உதவி செயலாளர் ரொபர்ட் கேட்லெக், கொரோனா தடுப்பூசி மருந்தை பாதுகாப்பான முறையில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு தடுப்பூசி மருந்திற்கான அங்கீகாரம் கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, 2021 ஜனவரி முதல், தடுப்பூசி மருந்தின் விநியோகம் ஆரம்பிக்கும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முடிந்தவரை விரைவாக, தடுப்பூசி விநியோகிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், ஜனவரிக்கு முன்னதாக தடுப்பூசி விநியோகம் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker