இலங்கை

கொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு வருகைதர முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 488இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலின் துபாயிலிருந்து 370 பேரும், மாலைதீவிலிருந்து 69 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து 45 பேரும், அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நான்கு பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும்,  தனியார் வைத்தியசாலை ஊழியர்களினால் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு,  தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker