இலங்கை

கொத்து ரொட்டி, ப்ரைட் றைஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது : பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், ப்ரைட்றைஸ் போன்ற உணவுகளை முடிந்தளவு தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நுண்ணுயிர்கள் தொடர்பிலான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமனிலையான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், போதியளவு உறக்கம் மற்றும் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விட்டமின் டி குறைப்பாடு இருந்தால் அது குறித்து கவனம் செலுத்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வாரமும், அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை நாட்டில் கொவிட் வைரஸ் வகைகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டுமெனவும், சில வேளைகளில் இலங்கையிலேயே இந்த வைரஸ் வகையில் மாற்றடைந்த புதிய வைரஸ் வகையொன்று உருவாவதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker