இலங்கை
		
	
	
‘உயிர் குமிழி’ முறை மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வர முடியும்


இலங்கைக்கு வருகை தரும் அல்லது வர திட்டமிட்டிருக்கும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ´உயிர் குமிழி´ (Bio Bubble) முறை மூலம் வர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வாறு வருகை தருபவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
				
					


