இலங்கை

உர இறக்குமதி தாமதமாவதற்கான காரணம்


இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நவம்பர் 30 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவ்வித விண்ணப்பங்களும் முன்வைக்கப்படவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பங்களை சமர்பித்ததன் பின்னர் உரத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதுடன் சில கட்டுப்பாடுகள் குறித்தும் பரிசீலிக்கப்படும் என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker