இலங்கை

இலங்கையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 ரூபாய்

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை அந்தந்த மாகாண மட்டத்தில் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடும் மழை காரணமாக மாத்தளை  மாவட்டம் ரத்தோட்டை, கம்மடுவ பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்று முற்றாக அழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker