இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!


இலங்கைக்குள் நேற்றய தினம் இரவு 9 வரையில் 9பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2880ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா, சவூதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களே தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் வைத்தியசாலைகளில் 247பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதேவேளை இன்று மாத்திரம் 29பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடுதிரும்பினர். இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 2622ஆக உயர்ந்துள்ளது.



