இலங்கை

கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் காரைதீவு பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு ….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து இன்றைய தினம் (19) காரைதீவு பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோணா வைரஸ் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்படடுள்ளமையை அடுத்து அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இதன் பாதிப்பை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

மேலும் இன் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் மோகன்தாஸ், கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் ஆதாரவாளர்கள் என பலர் கலந்துகொண்டு நிவாரணங்களை வழங்கி வைத்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வழங்கப்பட்டமைக்கு காரைதீவு மக்கள் தங்கள் நன்றிகளையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker