இலங்கை

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் – 42 பேர் கைது!

ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக இன்று (புதன்கிழமை) போராட்டம் நடத்திய 16 பெண்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் பேரணி ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

எனினும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீர்வின்றி முடிவுற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

எதிர்ப்பில் ஈடுபட்ட ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

எனினும் கலந்துரையாடலில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker